யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி மருத்துவமனை கொரோனா மருத்துவக்குழுவிடம் உத்தியோகபூர்வமாக சற்றுமுன்னதாக கையளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இனம்காணப்பட்டு வரும் நிலையில் கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களை புதிதாக ஏற்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைவாக கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ஏற்றவகையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மேம்படுத்தும் பணிகள் கடந்த நாட்களில் இடம்பெற்று வந்தது.
கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து இன்று காலை (ஒக்-19) சற்று முன்னதாக நடைபெற்ற நிகழ்வில் கொரோனா மருத்துவக்குழுவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்